Posts
Showing posts from 2018
தமிழனின் எண்கள்
- Get link
- X
- Other Apps
தமிழின் பெருமை... ஏறுமுக இலக்கங்கள்: 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thousand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் – one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் – one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 10000000000000000 = வெல்லம் -ten zillion 100000000000000000 = அன்னியம் -hundred zillion 1000000000000000000 = அர்த்தம் -? 10000000000000000000 = பரார்த்தம் —? 100000000000000000000 = பூரியம் -? 1000000000000000000000 = முக்கோடி -? 10000000000000000000000 = மஹாயுகம். இறங்குமுக இலக்கங்கள்: 1 – ஒன்று 3/4 – முக்கால் 1/2 – அரை கால் 1/4 – கால் 1/5 – நாலுமா 3/16 – மூன்று வீசம் 3/20 – மூன்றுமா 1/8 – அரைக்கால் 1/1...
நெருங்கும் இறுதி நாள்
- Get link
- X
- Other Apps
உலகம் அழியும் போது ஏற்ப்படும் நிகழ்வுகள் குறித்து இஸ்லாம் கூறும் விளக்கம் : 1. இறுதிநாளின் அடையாளங்கள் ( குர்ஆனிலிருந்து): 1. ய்ஃஜுஜ், மாஃஜுஜ் கூட்டத்தாரின் வருகை (18:94)(21:96) 2. புகைமண்டலம் உருவாகுதல் (44:10) 3.குர்ஆனை நம்பாதோரை இனங்காட்டி பேசுகின்ற பிராணியின் வருகை (27:82) 4. ஈஸாநபியின் வருகை (4:159) (19:33)(43:61) " இறுதிநாளின் ஆரம்ப நிகழ்வுகள் : 1. சூரியன் சுருட்டப்படும் 2. நட்சத்திரங்கள் வானிலிருந்து உதிர்ந்துவிடும் 3. மலைகள் அனைத்தும் பூமியிலிருந்து பெயர்த்து எடுக்கப்படும் 4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரின்றி திரியும் 5. விலங்குகள் அனைத்தும் ஒன்றாக திரட்டப்படும் 6. கடல்கள் தீமூட்டப்பட்டு எரிக்கப்படும் 7. உயிர்கள் அனைத்தும் அதனதன் உடல்களுடன் ஒன்று சேர்க்கப்படும் 8&9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்குழந்தையை எழுப்பி என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டாள் என விசாரிக்கப்படும் 10. வினைபதிவேடுகள் ( நன்மை, தீமை பதியப்பட்ட ஏடு) விரிக்கப்படும் 11. வானம் பிளக்கப்பட்டு அகற்றப்படும் 12. நரகம் கொழுந்துவிட்டு எரிக்கப்படும் (81:1to 12 ) 13. குழந்தைகள் நரைத்த கிழவர்களைப...
இராவுத்தர்கள் யார்?
- Get link
- X
- Other Apps
#இராவுத்தரும்_பாளையமும் #தெரிந்துகொள்வோம்.... முஸ்லிகளில் சிலரை இராவுத்தர் " என்று குறிப்பிடுவது ஏன்? அரபு மொழியில் " ரா - இத் " என்றால் குதிரை வீரன் என்று பொருள். இவ்வார்த்தை வடமொழியில் " ராஹுத் "என்றும், தெலுங்கில் " ரவுத்து " என்றும் வழங்கப்பட்டது. " ரவுத்து மெத்த காலூடே குர்ரம் மூடு காறாதே " ( குதிரை வீரன் குதிரையை அடக்க தெரிந்திருந்தால் மூணு கால்ல கூட குதிரை ஓடும் ) என்று தெலுங்கில் ஒரு பழமொழியும் உண்டு. இராவுத்தர் என்னும் முஸ்லிம் குதிரைவீரர்களுக்கு தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தாம் " பாளையம் " என்று முதலில் அழைக்கப்பட்டது. அக்காலத்தில் " பாளையம் இறங்கி இருக்கிறது " என்றால் குதிரைப்படை முகாம்மிட்டுள்ளது என்று அர்த்தம். உத்தமபாளையம், மேலப்பாளையம், இராஜபாளையம், மதுரையில் உள்ள கோரிப்பாளையம், கட்ராப்பாளையம், மாப்பாளையம்,பெரியகுளத்தில் உள்ள தண்டுப்பாளையம், தக்கலையில் உள்ள மக்காயிப் பாளையம் என "பாளையம்" என்ற சொல் இடம் பெயரும் அணைத்தது ஊர்பெயர்களும் இதன் அடிப்படையில் தோன்றியவைதான் மதுரை அரசு நாயக்கர...
தீபாவளி என்றால் என்ன?
- Get link
- X
- Other Apps
தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா? அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும். இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும்மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அட...
சரசுவதி பூசை
- Get link
- X
- Other Apps
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவா லேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மற...
ஆரியர்கள் பார்பனகள் யார்?
- Get link
- X
- Other Apps
வரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்று. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் தெளிவாக சில வரலாற்று முடிவுகளை, வரலாறு சார்ந்து எடுக்கமுடியும். 1. ஆரியர்கள் என்போர் வந்தேறிகளே. அவர்கள் கி.மு 1000 க்கும் கி.மு 2000 ஆண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை வந்தடைந்தவர்கள். 2. ரிக்வேதம் ஆரியருடையதும், ஆரியரால் பின்பட்ட ஒரு வாழ்வுமுறையுடன் கூடிய ஒரு சடங்கு முறையை அடிப்படைiயாகக் கொண்டது. ரிக்வேத உள்ளடக்கமும் அதன் வாழ்வியல் முறையும், இந்திய சமுதாயத்துடன் தொடர்பற்ற ஒன்று. 3. ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது. மாறாக ஆரியரின் ஒரு பிரிவு, அதுவும் இந்திய சமுதாய கலப்பின் ஊடாகத்தான் பார்ப்பனர்களானார்கள். மற்றைய ஆரிய பகுதி இந்திய சமூகத்துடன் ஒன்று கலந்து இனம் காணமுடியாது போய்விட்டனர். அத்துடன் இன்றைய பார்ப்பனர்களின் ஒரு பகுதி, ஆரிய கலப்பற்றவர்கள். அதாவது இவர்கள் ஆரிய பார்ப்பனர்களால், பார்ப்பனர்களானவர்கள். 4. ஆரியரின் எந்தப் ...
ஒன்றிணையும் சூரியனும் சந்திரனும்
- Get link
- X
- Other Apps
சந்திரன் மற்றும் பூமியின் ஆயுள் காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒரு கால கட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றினைந்து விடும் என்று கூறுகிறார்கள். இது பற்றிக் குர்ஆன் ஏதாவது கூறுகிறதா? இக்கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய விண்வெளி ஆய்வாளர்கள் கூறுவதைச் சற்று பார்ப்போம். சூரியனின் தன்மைகள்:- ஹைட்ரஜன் பெருமளவும் ஹீலியம் ஓரளவும் அடங்கிய ஒரு மிகப்பொய நெருப்புப் பந்து தான் சூரியன். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கள், மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் மொத்த எடையில் 98 சதவிகிதம் சூரியனின் எடையாகும். பூமியின் எடையை விட, சூரியனின் எடை 3, 30,000 மடங்கு அதிகமாகும். பூமியின் அளவை (Size) விட 109 மடங்கு பெரிதாகும். சூரியனின் வெளிப்புறத்தில் எரிந்துக் கொண்டிருக்கும் தீயின் சுவாலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையிலும் பரவிச் செல்கின்றது. இவ்வாறு எரிந்துக் கொண்டிருப்பதற்கு காரணம், சூரியனின் உட்புறத்தில் (Core) நிகழ்ந்துக் கொண்டிருக்கும் நியூக்ளியர் ரியாக்ஸன் (Neuclear Reaction) என்ற செயலின் முலம் ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுக்களாக...
இரண்டு கிழக்குகள் – இரண்டு மேற்குகள் எவ்வாறு நிரூபிப்பீர்கள்?
- Get link
- X
- Other Apps
இரண்டு கிழக்குகளுக்கும் – இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில் ஒரு வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு கிழக்கு – ஒரு மேற்கு மாத்திரமே உள்ள நிலையில் இரண்டு கிழக்குகளையும் – இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்? பதில்: 1. அல்லாஹ் – அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் – இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர் ரஹ்மானின் 17வது வசனம் அல்லாஹ் – அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் – இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று கூறுகிறது. ‘இரு கீழ்த் திசைகளுக்கும் இறைவன் அவனே. இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே.’ (அல் குர்ஆன் 55:17) அருள்மறை குர்ஆனில் இரண்டு மேல்திசைகள், இரண்டு கீழ்திசைகள் என பொருள்படும் (னுரயட) அரபி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி வார்த்தைகள் அல்லாஹ் – அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் – இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று பொருள் கொள்ள வைக்கிறது. 2. அல்லாஹ் – அவனே இரண்டு கிழக்கு எல்லைகளுக்கும், இரண்டு மேற்கு எல்லைகளுக்கும் இறைவன். ...
அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு
- Get link
- X
- Other Apps
அறிவியலில் இயற்பியல் என்றொரு பிரிவு இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பிரிவுதான் அணுக்களைப் பற்றிய பாடமாகும். அணு என்பது ஒரு பொருளின் மிக மிக சிறிய துகளாகும். இந்த அணு என்பதே மிகச்சிறிய பொருள் என்றும், இதை யாராலும் பிளக்க முடியாது என்ற தத்துவத்தை 23 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறியவர் டெமாக்ரேட்ஸ் (Democritus) என்ற கிரேக்க அறிஞர். அரபுலகிலும் சரி உலகின் மற்ற பாகங்களிலும் சரி இந்தக் கொள்கையே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அறிவியலின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்ட இக்காலத்து விஞ்ஞான உலகம், ஓர் அணுவை எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள் என பிரிக்க முடியும் என்று நிரூபித்து விட்டனர். அணு என்பதற்கு அரபியில் ‘ஜர்ரா‘ என்று அழைக்கப்படுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் இந்த அணுவை விடச் சிறிய பொருட்களும் உண்டு என கூறியிருப்பின் இது நமக்கு எல்லோருக்கும் ஆச்சரியமளிக்காதா என்ன? ஆம் திருக்குர்ஆன் இந்த உண்மையையும் கூறுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: – “எனினும் நிராகரிப்பவர்கள் ‘(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது‘ என்று கூ...
பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!
- Get link
- X
- Other Apps
நாம் வாழும் பூமிக்கும், நமக்கு மேலே பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயமாகிய வாணவெளிக்கும் இடையில் பல்வேறு வாயுக்களைத் தன்னகத்தே அடங்கிய காற்று மண்டலம் இருக்கிறது. இந்த காற்று மண்டலம் இல்லையென்றால் இந்த பூமியில் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. இந்த காற்று மண்டலம் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ளதாக தற்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியனிலிருந்து இடைவிடாமல் பூமியை நோக்கி வீசிக்கொண்டிருக்கும், மனிதர்களுக்குப் பல்வேறு கேடுகளை விளைவிக்கக் கூடிய அழிவுக் கதிர்களான புற ஊதாக்கதிர்கள் பூமியின் மேற்பரப்பையும் அதில் வசிக்கும் உயிரினங்களையும் தாக்காமல் தடுத்துக்கொண்டிருக்கும் ஓசோன் என்ற வாயு மண்டலமும் இந்த காற்று மண்டலத்தில் தான் உள்ளது. இதைத் தவிர சூரியனிலிருந்து அவ்வப்போது பூமியை நோக்கி வீசும் படு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெப்பக் கதிர்களையுடைய சூரியப் புயல் பூமியைத் தாக்கா வண்ணம் பூமிக்கு ஒரு கூரையாக அமைந்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூமியின் காந்த மண்டலமும் பூமிக்கும் வாணத்திற்கும் இடையே தான் அமைந்துள்ளது. இவைகளை சமீபத்தில் தான் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். இவை...
மரணித்தவர்களுக்காக கூலிக்கு ஆள்வைத்து குர்ஆன் ஓதலாமா?
- Get link
- X
- Other Apps
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி : மரணித்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அங்கு அல்குர்ஆன் ஓதுவது, மரித்தோரின் வீட்டில் கூலிக்கு அல்குர்ஆனை ஓதுவதின் சட்டமென்ன? நாம் அவர்களை மரித்தோருக்கு கருணைக் காட்டுபவர்கள் என்று தான் அழைப்போம்! பதில் : மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு ஒருவரின் ஜனாஸாவை அடக்கியதன் பின் அங்கு அல்குர்ஆனை ஓதுவது தெளிவான வழிகேடான பித்அத்தாகும். இவ்வாறான நடைமுறைகள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. அன்னார் அவ்வாறு செய்வதற்கு ஏவவோ, அல்லது அவர்களோ செய்யவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் ஜனாஸாவை அடக்கிவிட்டு அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து ‘உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள், அவரது உள்ளம் உறுதியுடன் இருப்பதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், ஏனெனில் அவர் இப்பொழுது விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.” மண்னறையில் அல்குர்ஆன் ஓதப்படுவது நன்மையாக இருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு வழிகாட்டியிருப்பார்கள். மரணித்தவரின் வீட்டில் கூடி அல்குர்ஆனை ஓதுவதற்கு, நபி (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ, தாபிஈன்களிடமோ, அதைத் தொடர்ந்து வந்தவர்களிடமோ எந்த முன்மாதிரியுமி...
ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
- Get link
- X
- Other Apps
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். ‘இல்முல் கை(g)ப்’ எனப்படும் ‘மறைவான ஞானம்’ அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் மறைவான விஷயங்கள் தெரியாது. நபிமார்களுக்கு அவன் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர எதுவும் தெரியாது. அதை அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களைக் கூறுமாறு பணித்திருக்கிறான். அல்லாஹ் கூறுகிறான்: – (நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50) (நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் ...
இஸ்லாத்தின் பார்வையில்
- Get link
- X
- Other Apps
உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள். உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!’ (2:223) இஸ்லாம் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் ஒழித்த மார்க்கமாகும். உடலுறவு தொடர்பில் யூதர்களிடம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் தாக்கம் மதீனத்து முஸ்லிம்களிடம் இருந்தது. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(வ) அறிவித்தார். ‘ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, ‘உங்கள் பெண்கள் உங்களுக்குரிய ‘விளை நிலம்’ ஆவர். எனவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:223 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது.’ (புஹாரி: 4528) யூதர்களின் இந்த மூடநம்பிக்கையால் தாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இந்த வசனத்தின் மூலமாக எந்த அடிப்படையில் வேண்டு மானாலும...
ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம்
- Get link
- X
- Other Apps
ஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக நாகரீகம் என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் ஆணும்-ஆணும்,பெண்ணும்-பெண்ணும் இணையும் ஓரினச்சேர்க்கை மேலை நாடுகளில் தொடங்கி பின்பு நாளடைவில் உலக அளவில் தன் கிளை பரப்பி,இப்போது கற்ப்புக்கும்- கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்தியாவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அடக்கி வாசித்ததற்கு காரணம், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறும் 377 வது சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்ததுதான். இந்த சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்று சமீபத்தில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டதும், அதையொட்டி மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி இந்த சட்டப்பிரிவை நீக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதும் நாம் அறிந்த ஒன்றே. இந்நிலையில், ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்றும், அதன்மீதான கிரிமினல் முத்திரை நீக்கப்படுவதாகவும், 377 பிரி...
8:14 இலவசமாக வெப்சைட் உருவாக்குவது எப்படி | Create free website in Tamil
- Get link
- X
- Other Apps
Delete செய்த Browsing History யை திரும்ப பார்ப்பது எப்படி?How to view clear Browsing History
- Get link
- X
- Other Apps
How to use your mobile like a pc with Windows 7 operating system
- Get link
- X
- Other Apps
TN RTO Codes, Names, Address, Phone Numbers and Pin Code
- Get link
- X
- Other Apps
TN01 RTO Chennai ( Central ) MTC Building, Ayanavaram, Chennai 600023 044 - 26745959 TN02 RTO Chennai ( North West ) PL No. 3623, G17, Anna Nagar, New Avadi Road, Chennai 600040 044 - 26215969 TN03 RTO Chennai ( North East ), No.147, Balakrishna Street, Tondiarpet T. H. Road, Chennai 600081 044 - 25911133 TN04 RTO Chennai ( East ) Power Mill Road, Basin Bridge, Pulianthoppu, Chennai 600012 044 - 26670993 TN05 RTO Chennai ( North ) No.10, A/4, Ist Cross Road, MKB Nagar Vysarbadi, Chennai 600012 044 - 26732525 TN06 RTO Chennai ( South East ) Triplicane (At Mandaveli), 17, R.K. Nagar, 3rd Cross Street Mandaveli, Chennai 600028 044 - 24610405 TN07 RTO Chennai ( South ) Thiruvalluvar Nagar, East Coast RD, Thiruvanmiyur Chennai 600041 044 - 24450404 TN09 RTO Chennai ( West ) 1, Bharathidasan Colony, Mambalam Taluk, Office Complex, K.K. Nagar, Chennai 600078 044 - 24894466 TN10 RTO Chennai ( South West ) 315 Kamarajar Salai, ...