இராவுத்தர்கள் யார்?
#இராவுத்தரும்_பாளையமும்
#தெரிந்துகொள்வோம்....
முஸ்லிகளில் சிலரை இராவுத்தர் "
என்று குறிப்பிடுவது ஏன்?
அரபு மொழியில் " ரா - இத் " என்றால் குதிரை வீரன் என்று பொருள். இவ்வார்த்தை வடமொழியில் " ராஹுத் "என்றும், தெலுங்கில் " ரவுத்து " என்றும் வழங்கப்பட்டது. " ரவுத்து மெத்த காலூடே குர்ரம் மூடு காறாதே " ( குதிரை வீரன் குதிரையை அடக்க தெரிந்திருந்தால் மூணு கால்ல கூட குதிரை ஓடும் )
என்று தெலுங்கில் ஒரு பழமொழியும் உண்டு.
இராவுத்தர் என்னும் முஸ்லிம் குதிரைவீரர்களுக்கு தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தாம் " பாளையம் " என்று முதலில் அழைக்கப்பட்டது.
அக்காலத்தில் " பாளையம் இறங்கி இருக்கிறது " என்றால் குதிரைப்படை முகாம்மிட்டுள்ளது என்று அர்த்தம்.
உத்தமபாளையம், மேலப்பாளையம், இராஜபாளையம், மதுரையில் உள்ள கோரிப்பாளையம், கட்ராப்பாளையம், மாப்பாளையம்,பெரியகுளத்தில் உள்ள தண்டுப்பாளையம், தக்கலையில் உள்ள மக்காயிப் பாளையம் என "பாளையம்" என்ற சொல் இடம் பெயரும் அணைத்தது ஊர்பெயர்களும் இதன் அடிப்படையில் தோன்றியவைதான்
மதுரை அரசு நாயக்கர்களின் ஆட்ச்சிக்கு உட்பட்ட பின்னர்,நிர்வாக வசதிக்காக பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இம்மண்டலங்களை குறிக்க " பாளையம்" என்ற சொல்லைப் பயன் படுத்தினர்.
இப்பாளையன்களை நிர்வகிக்க மன்னரால் நியமிக்கப்பட்டவர்கள் "பாளையக்காரர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
அந்தக்கால கட்டங்களில்
அரபுநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு பயிற்சியளிக்கின்ற பொறுப்புதனை
இஸ்லாமிய மார்கத்தை வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டிருந்த இந்திய தமிழக முஸ்லீம்களும் பெற்றிருந்தார்கள்.
குதிரைகளுக்கு பயிற்சியளிக்கும் கலையில் கைதேர்ந்தவர்களாக அவர்கள் இருந்தனர் எனவே அவர்களேயே குதிரைகளுக்கு பயிற்சியளிக்கவும் அவைகளை பராமரிக்கவும் அன்றைய மன்னர்கள் நியமித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது
அவர்களே ராவுத்தர் என அழைக்கப்பட்டனர் என்பதை வரலாறுகளின் வாயிலாக காணமுடிகிறது
எனவே "ராவுத்தர்"என்பது சாதிப்பெயரல்ல அன்று அவர்கள் செய்து வந்த தொழில்சார்ந்த சொல்லே என்பதை சந்தேகமின்றி அறியலாம்
தற்போதும் கூட
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில்
முஸ்லீம்களில் சிலர்
தங்களது குடும்ப திருமண விழாவில்
மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு
நன்குபயிற்சியளிக்கப்பட்ட குதிரையை நாட்டியக்குதிரையாக மாற்றி மாப்பிள்ளையை குதிரையின் மீது அமரவைத்து பேண்டு வாத்திய இசைக்கேற்ப குதிரையை
நடனமாடவிடுவதைக் காணலாம்.
(இது இஸ்லாமிய
வழிமுறையல்ல
முன்னோர்களின் பெயரில் தொன்றுதொட்டு தொடர்கிற செயல்களில் இதுவும் ஒன்று!)
குதிரைகள் மட்டுமே அரபு நாட்டு இறக்குமதி இந்திய முஸ்லிம்கள் அல்ல .
இவர்கள் மற்ற சமுகத்தை போலவே இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் . என்பதை எவறும் மறக்கவோ மறுக்கவோ முடியாது!
#வரலாறு_படைக்க
#வரலாறு_படிப்போம்
வரலாற்று கட்டுரைகளிலிருந்து படித்து உங்கள் பார்வைக்காக பதிவு செய்வது என் கடைமை இப்படிக்கு
ஷேக் அப்துல் காதர்
காக்கூர்
#தெரிந்துகொள்வோம்....
முஸ்லிகளில் சிலரை இராவுத்தர் "
என்று குறிப்பிடுவது ஏன்?
அரபு மொழியில் " ரா - இத் " என்றால் குதிரை வீரன் என்று பொருள். இவ்வார்த்தை வடமொழியில் " ராஹுத் "என்றும், தெலுங்கில் " ரவுத்து " என்றும் வழங்கப்பட்டது. " ரவுத்து மெத்த காலூடே குர்ரம் மூடு காறாதே " ( குதிரை வீரன் குதிரையை அடக்க தெரிந்திருந்தால் மூணு கால்ல கூட குதிரை ஓடும் )
என்று தெலுங்கில் ஒரு பழமொழியும் உண்டு.
இராவுத்தர் என்னும் முஸ்லிம் குதிரைவீரர்களுக்கு தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தாம் " பாளையம் " என்று முதலில் அழைக்கப்பட்டது.
அக்காலத்தில் " பாளையம் இறங்கி இருக்கிறது " என்றால் குதிரைப்படை முகாம்மிட்டுள்ளது என்று அர்த்தம்.
உத்தமபாளையம், மேலப்பாளையம், இராஜபாளையம், மதுரையில் உள்ள கோரிப்பாளையம், கட்ராப்பாளையம், மாப்பாளையம்,பெரியகுளத்தில் உள்ள தண்டுப்பாளையம், தக்கலையில் உள்ள மக்காயிப் பாளையம் என "பாளையம்" என்ற சொல் இடம் பெயரும் அணைத்தது ஊர்பெயர்களும் இதன் அடிப்படையில் தோன்றியவைதான்
மதுரை அரசு நாயக்கர்களின் ஆட்ச்சிக்கு உட்பட்ட பின்னர்,நிர்வாக வசதிக்காக பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இம்மண்டலங்களை குறிக்க " பாளையம்" என்ற சொல்லைப் பயன் படுத்தினர்.
இப்பாளையன்களை நிர்வகிக்க மன்னரால் நியமிக்கப்பட்டவர்கள் "பாளையக்காரர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
அந்தக்கால கட்டங்களில்
அரபுநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு பயிற்சியளிக்கின்ற பொறுப்புதனை
இஸ்லாமிய மார்கத்தை வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டிருந்த இந்திய தமிழக முஸ்லீம்களும் பெற்றிருந்தார்கள்.
குதிரைகளுக்கு பயிற்சியளிக்கும் கலையில் கைதேர்ந்தவர்களாக அவர்கள் இருந்தனர் எனவே அவர்களேயே குதிரைகளுக்கு பயிற்சியளிக்கவும் அவைகளை பராமரிக்கவும் அன்றைய மன்னர்கள் நியமித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது
அவர்களே ராவுத்தர் என அழைக்கப்பட்டனர் என்பதை வரலாறுகளின் வாயிலாக காணமுடிகிறது
எனவே "ராவுத்தர்"என்பது சாதிப்பெயரல்ல அன்று அவர்கள் செய்து வந்த தொழில்சார்ந்த சொல்லே என்பதை சந்தேகமின்றி அறியலாம்
தற்போதும் கூட
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில்
முஸ்லீம்களில் சிலர்
தங்களது குடும்ப திருமண விழாவில்
மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு
நன்குபயிற்சியளிக்கப்பட்ட குதிரையை நாட்டியக்குதிரையாக மாற்றி மாப்பிள்ளையை குதிரையின் மீது அமரவைத்து பேண்டு வாத்திய இசைக்கேற்ப குதிரையை
நடனமாடவிடுவதைக் காணலாம்.
(இது இஸ்லாமிய
வழிமுறையல்ல
முன்னோர்களின் பெயரில் தொன்றுதொட்டு தொடர்கிற செயல்களில் இதுவும் ஒன்று!)
குதிரைகள் மட்டுமே அரபு நாட்டு இறக்குமதி இந்திய முஸ்லிம்கள் அல்ல .
இவர்கள் மற்ற சமுகத்தை போலவே இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் . என்பதை எவறும் மறக்கவோ மறுக்கவோ முடியாது!
#வரலாறு_படைக்க
#வரலாறு_படிப்போம்
வரலாற்று கட்டுரைகளிலிருந்து படித்து உங்கள் பார்வைக்காக பதிவு செய்வது என் கடைமை இப்படிக்கு
ஷேக் அப்துல் காதர்
காக்கூர்
Comments
Post a Comment