அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு

அறிவியலில் இயற்பியல் என்றொரு பிரிவு இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பிரிவுதான் அணுக்களைப் பற்றிய பாடமாகும். அணு என்பது ஒரு பொருளின் மிக மிக சிறிய துகளாகும்.

இந்த அணு என்பதே மிகச்சிறிய பொருள் என்றும், இதை யாராலும் பிளக்க முடியாது என்ற தத்துவத்தை 23 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறியவர் டெமாக்ரேட்ஸ் (Democritus) என்ற கிரேக்க அறிஞர். அரபுலகிலும் சரி உலகின் மற்ற பாகங்களிலும் சரி இந்தக் கொள்கையே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அறிவியலின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்ட இக்காலத்து விஞ்ஞான உலகம், ஓர் அணுவை எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள் என பிரிக்க முடியும் என்று நிரூபித்து விட்டனர்.

அணு என்பதற்கு அரபியில் ‘ஜர்ரா‘ என்று அழைக்கப்படுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் இந்த அணுவை விடச் சிறிய பொருட்களும் உண்டு என கூறியிருப்பின் இது நமக்கு எல்லோருக்கும் ஆச்சரியமளிக்காதா என்ன? ஆம் திருக்குர்ஆன் இந்த உண்மையையும் கூறுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: –

“எனினும் நிராகரிப்பவர்கள் ‘(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது‘ என்று கூறுகிறார்கள். அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும். அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன். வானங்களிலோ பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது. இன்னும் அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹூல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக” (அல்குர்ஆன்: 34:3, 10:61.)

இவ்வசனத்தில் அணுவை விடச் சிறியதோ அல்லது பெரியதோ என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் அணுவைவிட சிறிய பொருட்களும் உண்டு என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை கூறியிருப்பதை நாம் அறியலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

Comments

Popular posts from this blog

ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம்

ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

உவமைத்தொடர் உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும். ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும். உவமைக்கு சில உதாரணங்கள் அச்சாணியற்ற தேர் போல - உயிர் நாடியற்றது. அத்தி பூத்தது போல - மிக அரிதாக ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம் ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல் கீரியும் பாம்பும் போல - பகை உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை கரடி பிறை கண்டது போல - மிக அரிது உள்ளீடற்ற புதர் போல - போலி அடியற்ற மரம் போல - மூலபலமற்றது. கடன்பட்டார் நெஞ்சம் போல - பதைபதைப்பு கண்ணுக்கு இமை போல - பாதுகாப்பு குரங்கின் கை பூமாலை போல - தகுதியில்லாதவர்களுக்கு வழங்குதல் எலியும் பூனையும் போல - சன்டை சூரியனை கண்ட பனி போல - மறைதல் செத்து செத்து எழும் பீனிக்சு போல - அழியாது வலையில் அகப்பட்ட மான் போல - துடித்தல் நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல - திக்கு தெரியாமல் தடுமாறுதல் வேலியே பயிரை மேய்ந்தது போல - பாதுகாக்க வேண்டியதே பாதிப்பாய் அமைதல் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல - பிரயோசனமின்மை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் - இரண்டு மனம் கொண்டவன் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழைவதுபோல - அறிவற்ற தன்மை விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி தாமரை அலை தண்ணீர் போல - பற்றற்றது உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி சிப்பிக்குள் முத்து போல - மேன்மை இன்று மழர்ந்த தாமரை போல - சிரித்த முகம் உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு நகமும் சதையும் போல - ஒற்றுமை நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை கிணற்றுத் தவளை போல - உலகை அறியாமை வெந்த புண்ணில் வேல் பாயடச்சியது போல - துன்பத்திற்கு மேல் துன்பம்