க ன்னியாகுமரி உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன் , என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூத ாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக் கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன்தீவு"என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்". ஏழு தெங்கநாடு, ஏழுமதுரைநாடு ஏழுமுன்பலைநாடு, ஏழுபின் பலைநாடு,ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரைநாடு ஏழுகுரும்பனை நாடு என நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது . இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம், மாபுராணம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் "ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாறு ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங் கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்

Comments

Popular posts from this blog

ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம்

உவமைத்தொடர் உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும். ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும். உவமைக்கு சில உதாரணங்கள் அச்சாணியற்ற தேர் போல - உயிர் நாடியற்றது. அத்தி பூத்தது போல - மிக அரிதாக ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம் ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல் கீரியும் பாம்பும் போல - பகை உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை கரடி பிறை கண்டது போல - மிக அரிது உள்ளீடற்ற புதர் போல - போலி அடியற்ற மரம் போல - மூலபலமற்றது. கடன்பட்டார் நெஞ்சம் போல - பதைபதைப்பு கண்ணுக்கு இமை போல - பாதுகாப்பு குரங்கின் கை பூமாலை போல - தகுதியில்லாதவர்களுக்கு வழங்குதல் எலியும் பூனையும் போல - சன்டை சூரியனை கண்ட பனி போல - மறைதல் செத்து செத்து எழும் பீனிக்சு போல - அழியாது வலையில் அகப்பட்ட மான் போல - துடித்தல் நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல - திக்கு தெரியாமல் தடுமாறுதல் வேலியே பயிரை மேய்ந்தது போல - பாதுகாக்க வேண்டியதே பாதிப்பாய் அமைதல் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல - பிரயோசனமின்மை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் - இரண்டு மனம் கொண்டவன் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழைவதுபோல - அறிவற்ற தன்மை விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி தாமரை அலை தண்ணீர் போல - பற்றற்றது உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி சிப்பிக்குள் முத்து போல - மேன்மை இன்று மழர்ந்த தாமரை போல - சிரித்த முகம் உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு நகமும் சதையும் போல - ஒற்றுமை நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை கிணற்றுத் தவளை போல - உலகை அறியாமை வெந்த புண்ணில் வேல் பாயடச்சியது போல - துன்பத்திற்கு மேல் துன்பம்

ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?